பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! |
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபட்டி. அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் ராணா. சமீபத்தில் சிகாகோ பயணம் மேற்கொண்டிருந்த ராணா அங்கிருந்து ஊர் திரும்பும்போது சிகாகோவில் நடைபெற்ற ஒரு ரசிகருடனான சந்திப்பு சோசியல் மீடியாவில் வீடியோவாக வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதாவது சிகாகோவில் இருந்து கிளம்புவதற்காக விமான நிலையத்தை நோக்கி ராணா காரில் வந்திருக்கிறார். அப்போது பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து ஒரு ரசிகர் கண்ணாடியை இறக்கி ராணாவிற்கு ஹாய் சொல்கிறார். இதனை தொடர்ந்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்குகிறார் ராணா.
பின்தொடர்ந்து வந்த காரில் இருந்து அந்த ரசிகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ராணாவின் இந்த செயலால் இன்ப அதிர்ச்சி அடைந்து காரில் இருந்து இறங்கி அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களது காரின் பானெட்டிலும் ரசிகரின் சட்டையிலும் ஆட்டோகிராப் போட்டு தந்தார். ரசிகரை பார்த்ததும் ஒரு ஹாய் கூட சொல்லாமல் கார் கண்ணாடியை இறக்காமல் செல்லும் சில ஹீரோக்களுக்கு மத்தியில் ரசிகரை மதித்து அதுவும் வெளிநாட்டில், ராணா இப்படி நடந்து கொண்ட செயல் நெட்டிசன்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.