ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு : மேல்முறையீடு செய்கிறது தணிக்கை வாரியம் | 'பராசக்தி, ஜனநாயகன்' டிரைலர்களை தட்டித் தூக்கிய 'டாக்சிக்' வீடியோ | தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! |

கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனதால் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சார்லி 777 மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் பார்ட்டி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகராக மாறி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் பேச்சுலர் பார்ட்டி என்கிற படம் வெளியானது.
இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜூன் ராமு என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து எம்ஆர்பி மியூசிக் நிறுவனத்தின் அனுமதியின்றி அவர்களது பாடல்களை ரக்ஷித் ஷெட்டி பயன்படுத்தியதை விசாரணையில் உறுதி செய்த நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டு தொகையாக இருபது லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை 15ம் தேதி, இந்த பிரச்சனை குறித்து ஆ சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த பதிவில் சில நொடிகள் இசையை பயன்படுத்தியதற்காக எம்ஆர்பி மியூசிக் நிறுவனம் அதிகபட்ச தொகை கேட்பதாக விமர்சித்திருந்தார். அந்த பதிவையும் அவர் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.