மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சின்னத்திரையில் பல வருடங்களாக பயணித்து வருபவர் ஜீவிதா. திறமையான நடிகை என பெயரெடுத்த இவர் இதுவரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி சேனல்களின் சீரியல்களிலும் வில்லி மற்றும் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் தனக்கு சரியான வாய்ப்பும், தனது திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என மனம் கொந்தளிக்கும் இவர், அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் சினிமாவில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து பேசியிருக்கிறார்.
முன்னதாக சினிமாவில் தன்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்பவர்கள் தமிழர்கள் தான் என குண்டை தூக்கிப் போட்ட ஜீவிதா, தற்போது 'ரெக்க' படத்தின் இயக்குநர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். அவரது பேட்டியில், 'சினிமாவில் என்னை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. சிலர் கடைசி வரையில் நீங்கள் படத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், அந்த படமே கடைசியில் வெளியாகி விடும்.
அப்படித்தான் ரெக்க படத்தின் இயக்குநர் ரத்தினவேல் எனக்கு தெரிந்தவர் தான். அந்த படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடலை என்னை நினைவில் வைத்து தான் எழுதியதாக சொன்னார். எனது கண்கள் பிடிக்கும் என்று சொன்னார். என்னை பார்த்தால் அவரது அத்தை ஞாபகத்துக்கு வருவதாக சொன்னார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த கேரக்டரில் வேறு நடிகையை நடிக்க வைத்துவிட்டார். இப்படி எனக்கு பல ஏமாற்றங்கள் சினிமாவில் நடந்திருக்கிறது' என்று அந்த பேட்டியில் ஜீவிதா கூறியிருக்கிறார்.