ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் இருந்து இப்போதைய மூன்றாம் பாகம் வரை மோகன்லால், மீனா, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகரான முரளி கோபி ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக படத்தில் புதிதாக இணைந்திருந்தார். ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சாய்குமார் கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் படப்பிடிப்பின் போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 'ஜெயிலர்' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




