'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் | அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்' |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் இருந்து இப்போதைய மூன்றாம் பாகம் வரை மோகன்லால், மீனா, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகரான முரளி கோபி ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக படத்தில் புதிதாக இணைந்திருந்தார். ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சாய்குமார் கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் படப்பிடிப்பின் போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 'ஜெயிலர்' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.