தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் இருந்து இப்போதைய மூன்றாம் பாகம் வரை மோகன்லால், மீனா, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகரான முரளி கோபி ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக படத்தில் புதிதாக இணைந்திருந்தார். ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சாய்குமார் கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் படப்பிடிப்பின் போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 'ஜெயிலர்' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.