Advertisement

சிறப்புச்செய்திகள்

எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு

06 ஆக, 2025 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Urvashi-alleges-that-Aadujeevitham-was-ignored-by-the-award-committee-due-to-the-Emburan-controversy
Advertisement

சமீபத்தில் 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. முழுக்க முழுக்க கமர்சியல் படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை எழுப்பி உள்ளது. அதேசமயம் மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்கிற படத்திற்காக பல வருடங்கள் உயிரைக் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்த பிரித்விராஜும் அந்த படமும் விருது குழுவால் கண்டுகொள்ளக்கூட படவில்லை என்கிற விஷயமும் கடந்த இரண்டு தினங்களாகவே பேசு பொருளாகி உள்ளது. குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற நடிகை ஊர்வசி கூட தனக்கு விருது கிடைத்தது பற்றி பெரிதாக சந்தோஷப்படாமல் உரிய திறமையாளர்களுக்கு விருது கிடைக்காமல் போய்விட்டதே என்கிற தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது, “ஆடுஜீவிதம் படம் எப்படிப்பட்ட படம் அதில் நடிகர் பிரித்விராஜின் நடிப்பு, இயக்குனர் பிளஸ்சியின் உழைப்பு எப்படிப்பட்டது. அதை விருது குழுவினர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லையே. காரணம் வேறு ஒன்றும் இல்லை எம்புரான் படம் தான்” என்று கூறியுள்ளார்.

எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த சில நிமிட காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியானது. அந்தப் படத்தை இயக்கியது நடிகர் பிரித்விராஜ் தான், அதனால் அதே பிரித்விராஜ் நடித்த ஆடுஜிவிதம் படத்தை திட்டமிட்டு விருது குழுவினர் புறக்கணித்துள்ளனர் என்றும், இதில் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பதும் தான் ஊர்வசி சொல்ல வந்த கருத்து என்பது தெளிவாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல்தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in