‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவர் கதாநாயகியாக புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் பிரபல மலையாள வில்லன் நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். மீண்டும் இரண்டாவதாக ஒரு திருமணமும் செய்து கொண்டார். இந்த நிலையில் முதல் திருமணத்தின் போது தனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதில் அவர் கூறும்போது, “முதல் திருமணம் நடைபெற்று எனது கணவரின் வீட்டில் நுழைந்தபோது நான் என் வீட்டிலும் எனது சுற்றத்தார் வீடுகளிலும் பார்த்த எந்த சூழ்நிலையும் அங்கே எனக்கு தென்படவில்லை. காரணம் அங்கே ஒவ்வொருவரும் ரொம்பவே மாடர்னாக இருந்தார்கள். குறிப்பாக குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், குழந்தைகள் முதல் கொண்டு தங்கள் தாயுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். என்னதான் அதை தவிர்க்க நினைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நானும் அந்த சூழலுக்கு என்னை பொருத்திக் கொள்ள வேண்டியதாக ஆகிவிட்டது. இதை தவிர்ப்பதற்காகவே மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினேன்” என்று கூறியுள்ளார்.