மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த அவர் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். புகழின் உச்சியில் இருக்கும்போது தானே சொந்தமாக படங்களை தயாரிக்கும் முடிவுடன் 'ஸ்ரீசுகுமாரன் புரோடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 'மச்சரேகை 'என்ற படத்தை தயாரித்தார். அது சுமாராக ஓடியது. அதனையடுத்து 'விளையாட்டு பொம்மை' படத்தை தயாரித்தார். அதுவும் அவருக்கு பலன் தரவில்லை.
அடுத்து தானே 'சின்னத்துரை' என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வழுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய 'இருமன கன்னிகள்' என்ற நாவலை திரைப்படமாக்கினார். இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதை.
இதில் அவருடன் எஸ்.வரலக்ஷ்மி, பி.ஆர்.பந்துலு, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, ஜே.பி.சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எஸ்.ஆர்.வரலட்சுமி, கே.சயீராம், 'ஸ்டண்ட்' சோமு, 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.எஸ்.ஹரிஹரன், ராமையா சாஸ்திரி, கே.ராமு, வேணுபாய், கே.எஸ்.அங்கமுத்து மற்றும் சி.ஆர்.ராஜகுமாரி, சௌதாமினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் தன் சொத்துக்களை இழந்தார். அடுத்துவந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 'மாலையிட்ட மங்கை' படத்தின் மூலமாக திரையுலகில் மீண்டு வந்தார். அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜியின் காலம் வரை நடித்துக் கொண்டிருந்தார்.