'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

பிரபல நடிகை ராதிகாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவிலும் சின்னத்திரையிலும் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த ராதிகா, தற்போது நடிப்பு ஒருபக்கம் அரசியல் ஒரு பக்கம் என பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராதிகா, 'நான் எப்போதும் என்னை பற்றியோ என் வேலை பற்றியோ பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ரொம்ப கொடுமையாக இருந்தது. படங்களில் நடித்து கொண்டிருந்த போது காலில் அடிபட்டது. மாத்திரைகள், பிசியோதெரபி பலனளிக்கவில்லை. மருத்துவர் பரிந்துரையின்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
அதேபோல் என்னுடைய மிக்கபெரிய தூண், வலிமை, தங்க இதயம் கொண்ட சரத்குமார் இந்த இரண்டு தினங்களாக என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை அதிகமாக நேசிக்கவும், உங்களை பாராட்டிக் கொள்ளவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டு உலக பெண்கள் தினத்திற்கான வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.




