‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக சினிமா படைப்பாளிகள் கருதுவது கிராமி விருதுகளை தான். அந்த வகையில் வரும் பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகள் தங்களது படைப்புகளை பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ளும் விதமாக அனுப்பி வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் ஆகிய படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரண்டு படங்களின் இசையமைப்பாளர் சுஷின் சியாம் இந்த தகவலை சமீபத்தில் தான் வெளியிட்டு இருந்தார்.
அதேபோல கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு மலையாளத் திரையுலகில் மீண்டும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் படமும் கிராமி விருதுகளுக்கான குறிப்பிட்ட பிரிவில் பங்கேற்குமாறு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அது கிராமி தேர்வு கமிட்டியால் நிராகரிக்கப்பட்டது. சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இதுகுறித்து அளித்த பேட்டியில், “ஆடு ஜீவிதம் படத்தின் சவுண்ட் ட்ராக் அதில் கலந்து கொள்ள நிர்ணயிக்கப்பட நேரத்தை (நீளத்தை) விட ஒரு நிமிடம் குறைவாக இருந்ததால் தேர்வுக் குழுவினரால் நிராகரிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது போல அல்ல கிராமி விருது. அதில் ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை 100 சதவீதம் பூர்த்தி செய்தால் மட்டுமே அதில் கலந்து கொள்ள முடியும். மற்றபடி விருதுகளை இலக்காக வைத்து செயல்படுவது என் நோக்கம் அல்ல” என்று கூறியுள்ளார்.