என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு கட்டமாக நடக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.. இவர் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த ஆபரேஷன் ஜாவா மற்றும் சவுதி வெள்ளக்கா ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் இந்த படத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஓட்டும் சண்முகம் என்கிற டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.