காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு கட்டமாக நடக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.. இவர் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த ஆபரேஷன் ஜாவா மற்றும் சவுதி வெள்ளக்கா ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் இந்த படத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஓட்டும் சண்முகம் என்கிற டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.