பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடர் பல காரணங்களுக்கிடையே சிக்கி விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஹீரோயினாக ஜனனி என்ற வேடத்தில் நடித்த மதுமிதாவிற்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் மதுமிதாவை மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க சொல்லி கேட்க, தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறும் வகையில் மதுமிதாவும் தமிழிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியிருக்கிறாராம். ஜீ தமிழில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டுவிட்ட நிலையில் புதிய சீரியல்கள் அந்த இடத்தை பிடிக்க வருகின்றன. அதில் ஒரு சீரியலில் தான் மதுமிதா என்ட்ரி கொடுத்திருப்பதாக சின்னத்திரை வட்டாராங்களில் செய்திகள் பரவி வருகிறது.