ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா தமிழில் விஜய்யின் ‛பிகில்' படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கார்த்தியின் ‛விருமன்' படத்திலும் நடித்தார். சில மாதங்களுக்கு முன் கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர் தற்போது தனது கணவருடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் வெளியான எபிசோடின் புரொமோவில் இந்திரஜாவும் கார்த்திக்கும் தாங்கள் அப்பா அம்மா ஆவப்போவதாக சொல்ல நடுவர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறினர். இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த ரோபோ சங்கர் மிக இளவயதில் தாத்தாவான பிரபலம் நானாக தான் இருப்பேன் என்று எமோஷ்னலாக பேசினார். இதனையடுத்து அந்த தொலைக்காட்சியின் வழக்கமான டெம்பிளேட்டாக ஒரு மினி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.