'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல சின்னத்திரை நடிகையான ராணி.ஒரு காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களில் கொடிக்கட்டி பறந்தார். இப்போது போலீஸ் கேரக்டர் என்றாலே ராணி தான் என்கிற அளவுக்கு பல தொடர்களில் போலீஸாக நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ராணி படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது அம்மா இறந்துவிட்டாராம். அக்கா, தங்கைகள் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே ராணிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்களாம். அதன்பிறகு அவருக்கு மகன் பிறக்க, சீரியலில் நடிக்க வந்த ராணி இன்று வரை தன் குடுபத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறார். அதேசமயம் அவரது அப்பா ராணியின் வளர்ப்பு, படிப்பு, திருமணம் என எதையுமே பார்க்கவில்லை என மிகவும் சோகமாக பேசியுள்ளார். இது தான் ராணி தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சோகம் எனவும் கூறியுள்ளார்.