2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் தவறாக செய்திகள் வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. விபத்து நடந்தது உண்மை. அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.