இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் தவறாக செய்திகள் வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. விபத்து நடந்தது உண்மை. அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.