‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அன்பே வா தொடரில் பூமி என்கிற கதாபாத்தித்தில் நடித்து பிரபலமானவர் டெல்னா டேவிஸ். ஆனால், திடீரென அந்த தொடரை விட்டு அவர் விலகிய நிலையில் கண்மணி என்கிற கேரக்டரை ஹீரோயினாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து டெல்னா டேவிஸ் ரசிகர்கள் அவரிடம் மீண்டும் அன்பே வா தொடரில் நடிக்க வர சொல்லி கேட்க, அவர் தற்போது வேறொரு சீரியலில் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கவுள்ளார். சரிகம நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தொடரில் டெல்னா டேவிஸ், விஜய் டிவி மெளன ராகம் 2 புகழ் சல்மான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடரின் ஷூட்டிங்கானது அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.