‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் தவறாக செய்திகள் வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. விபத்து நடந்தது உண்மை. அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.