சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து மிர்ச்சி செந்தில் நாயகனாகவும், ரச்சிதா மஹாலெட்சுமி நாயகியாகவும் நடித்து வரும் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ரச்சிதா தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தொடரிலிருந்து திடீரென விலகிவிட்டார்.
ரச்சிதா விலகியதையடுத்து அடுத்தது மஹாலெட்சுமியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் புது மஹாலெட்சுமியாக அரண்மனை கிளி மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ரச்சிதாவை போல் மோனிஷாவால் நடிக்க முடியுமா? ரச்சிதா வேற லெவல் நடிகையாச்சே என பேசி வருகின்றனர். ஆனால், மோனிஷா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் நடிப்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.