ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனா முதல் அலை கடந்த வருடம் தீவிரமடைந்த சமயத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரையுலக பிரபலங்கள், லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி உதவியை அள்ளித் தந்தனர். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நட்சத்திரங்கள் தங்கள் தரப்பிலிருந்து உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை விட, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
அந்தவகையில் தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையில் இருந்து, ஆந்திராவில் தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஹிந்துபூர் தொகுதியில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக இந்த மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.