'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கொரோனா முதல் அலை கடந்த வருடம் தீவிரமடைந்த சமயத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரையுலக பிரபலங்கள், லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி உதவியை அள்ளித் தந்தனர். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நட்சத்திரங்கள் தங்கள் தரப்பிலிருந்து உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை விட, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
அந்தவகையில் தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையில் இருந்து, ஆந்திராவில் தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஹிந்துபூர் தொகுதியில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக இந்த மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.