தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தற்போது தீவிரமாகி வரும் கொரோனா இரண்டாவது அலைக்கு ஏழை பணக்காரன், பிரபலம் என்கிற பாகுபாடு இல்லாமல், பல உயிர்கள் பலியாகி வருகின்றன. திரையுலகில் உள்ள வயதானவர்கள் மட்டுமல்ல, இளம் வயது நபர்களும் கொரோனா தொற்றால் மரணத்தை தழுவி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் சமீபத்திய நபராக தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தியாலா ரவி என்பவர் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இவர் நாக சவுர்யா நடித்த.லட்சுமி ராவே மா இன்டிகி மற்றும் ஓரே புஜ்ஜிகா உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாட்களாகவே சிகிச்சை எடுத்து வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார். நடிகர் நாக சவுர்யா இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.