உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
பாகுபலி-2 படத்தில் நடித்த பிறகு பல மாதங்களாக ஓய்வெடுத்து வந்த பிரபாஸ், தற்போது சுஜீத் இயக்கும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது பாடிலாங்குவேஜை பக்காவாக மாற்றி ஸ்டைலிசான கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படமும் பாகுபலி படத்தைப்போன்றே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது.
மேலும், இந்த படத்தில் நடித்த பிறகு பாலிவுட் பட இயக்குனர் கரண் ஜோகர் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கயிருந்ததாகவும், அந்த படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் பாலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியை பிரபாஸ் தரப்பு மறுத்துள்ளது. நேரடி இந்தி படத்தில் நடிப்பது சம்பந்தமாக இதுவரை எந்த டைரக்டரிடம் கதை கேட்கவில்லை. இப்போதைக்கு பிரபாஸின் முழுக்கவனமும் சாஹோ படத்தில்தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.