பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்ப நபர்கள் வந்து செல்கின்றனர். ஷிவானியை பார்க்க அவரது தாய் வந்ததோடு, பெற்ற மகளை நிகழ்ச்சி என்ற கூட பார்க்காமல் விளாசி தள்ளிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம், பாலாஜியின் பின்னால் சுற்றியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அவரை திட்டினார். இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுப்பற்றி பாடகி சின்மயி சமூகவலைதளத்தில், ''இந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் ஒருவர் எனக்கு இதுப்பற்றி என்னிடம் கூறினார். தாயே தன் மகளை அசிங்கப்படுத்தியது தவறாக தெரிகிறது. சின்ன விஷயத்திற்கு கூட மகள்களை விலைமாது போன்று நடத்தும் பழக்கம் இந்திய பெற்றோர் சிலரிடம் உள்ளது. யாரை மயக்க பாக்குற, எவன் பின்னாடி சுத்துற என அம்மாக்களே கேட்கிறார்கள். ஊர்ல 4 (உதவாக்கர) பேர் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர்கள் தங்கள் மகள்களையே அசிங்கப்படுத்த காரணம். இதுபோன்று செய்யாதீர்கள், பொறுப்பாக பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.