ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்ப நபர்கள் வந்து செல்கின்றனர். ஷிவானியை பார்க்க அவரது தாய் வந்ததோடு, பெற்ற மகளை நிகழ்ச்சி என்ற கூட பார்க்காமல் விளாசி தள்ளிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம், பாலாஜியின் பின்னால் சுற்றியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அவரை திட்டினார். இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுப்பற்றி பாடகி சின்மயி சமூகவலைதளத்தில், ''இந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் ஒருவர் எனக்கு இதுப்பற்றி என்னிடம் கூறினார். தாயே தன் மகளை அசிங்கப்படுத்தியது தவறாக தெரிகிறது. சின்ன விஷயத்திற்கு கூட மகள்களை விலைமாது போன்று நடத்தும் பழக்கம் இந்திய பெற்றோர் சிலரிடம் உள்ளது. யாரை மயக்க பாக்குற, எவன் பின்னாடி சுத்துற என அம்மாக்களே கேட்கிறார்கள். ஊர்ல 4 (உதவாக்கர) பேர் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர்கள் தங்கள் மகள்களையே அசிங்கப்படுத்த காரணம். இதுபோன்று செய்யாதீர்கள், பொறுப்பாக பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.