காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மறைந்த நடிகர் குமரிமுத்து முன்பு அளித்த ஒரு பேட்டியை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‛சில கற்றார் பேச்சும் இனிமையே...' என பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த பேட்டியில், நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார் குமரிமுத்து.
அதில், இந்தப் பாடலில் யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் படித்தவர்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை. சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள் பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, பெரிய சூரியனின் ஒளியில் இருந்து ஒரு சிறு குடை காப்பது போல் என்று அந்த பாடலின் விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக இப்போது இந்த பதிவை போட்டு உள்ளார். இதன் மூலம் யாருக்காவது அவர் பதில் கொடுத்து இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில இளையராஜா, வைரமுத்து ஆகியோரை குறிப்பிட்டுள்ளதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.