அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கவுதமி. சமூக ஆர்வலரும் கூட. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கவுதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அழகப்பனோ பிளசிங் அக்ரோ பார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு பவர் எழுதி வாங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது என்பதால் தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் கவுதமி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணைக்கு ஆஜராகி விபரங்களை தெரிவித்துள்ளார்.