நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கவுதமி. சமூக ஆர்வலரும் கூட. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கவுதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அழகப்பனோ பிளசிங் அக்ரோ பார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு பவர் எழுதி வாங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது என்பதால் தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் கவுதமி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணைக்கு ஆஜராகி விபரங்களை தெரிவித்துள்ளார்.




