விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் |
1980களில் முன்னணியில் இருந்தவர் நடிகை கவுதமி. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சில படங்களிலும் நடிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான 9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாளராக இருந்த அழகப்பன், மோசடி செய்து அபகரித்து விட்டதாகவும், சட்டவிரோதமாக அனுமதி பெற்று கட்டடம் கட்டி வருவதாகவும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி அந்த இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் என்னிடம் 96 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள்.மேலும், வக்கீல்கள் என்ற போர்வையில் 'வாட்ஸ்-அப்' மூலம் என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகிறார்கள்.
எனக்கு மிரட்டல் விடுக்கும் அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், அதனால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.