பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் கூட்டமாக பல நடிகர்கள் நடித்திருந்தாலும் குணா குகைக்குள் தவறி விழும் நடிகராக நடித்திருந்த ஸ்ரீநாத் பாஷியும் தன் உயிரை பணயம் வைத்து அந்த குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றுபவராக நடித்த சவ்பின் சாஹிரும் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்கள். அந்த வகையில் சவ்பின் சாஹிர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். ஸ்ரீநாத் பாஷிக்கும் பல படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.
அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பொங்கலா'. இந்த படத்தை ஏபி பினில் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முக்கியமான சில காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சி அளித்தது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் இப்படி பட காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் இயக்குனர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பைசல் ஷா என்பவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர்தான் படப்பிடிப்பு சமயத்தில் தனது மொபைல் போனில் சில காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.




