சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழில் 'அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழைவிட மலையாள திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஒரு வருடமாகவே இவரது திருமணங்கள் குறித்தும் திருமண முறிவுகள் குறித்தும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா.
இது இவரது நான்காவது திருமணம். இதற்கு முன்பு மூன்று திருமணங்கள் செய்து அவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் பாலா. இதில் இரண்டாவது மனைவியான பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் மற்றும் மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத் ஆகியோர் நடிகர் பாலா மீது அவ்வப்போது சோசியல் மீடியாவில் சில குற்றச்சாட்டுகளை வைத்து வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பாலாவும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இது இப்படியே தொடர்கதையாக இருப்பதால் கொச்சியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு தனது மனைவி கோகிலாவுடன் நேரில் சென்று அம்ருதா சுரேஷ் மற்றும் எலிசபெத் ஆகியோர் மீது தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக புகார் கொடுத்துள்ளார் பாலா. அது மட்டுமல்ல அஜு அலெக்ஸ் என்கிற யூடியூபர் தொடர்ந்து தன்னைப் பற்றிய தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று அவர் மீதும் புகார் கொடுத்துள்ளார் நடிகர் பாலா.