‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் 'அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழைவிட மலையாள திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஒரு வருடமாகவே இவரது திருமணங்கள் குறித்தும் திருமண முறிவுகள் குறித்தும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா.
இது இவரது நான்காவது திருமணம். இதற்கு முன்பு மூன்று திருமணங்கள் செய்து அவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் பாலா. இதில் இரண்டாவது மனைவியான பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் மற்றும் மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத் ஆகியோர் நடிகர் பாலா மீது அவ்வப்போது சோசியல் மீடியாவில் சில குற்றச்சாட்டுகளை வைத்து வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பாலாவும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இது இப்படியே தொடர்கதையாக இருப்பதால் கொச்சியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு தனது மனைவி கோகிலாவுடன் நேரில் சென்று அம்ருதா சுரேஷ் மற்றும் எலிசபெத் ஆகியோர் மீது தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக புகார் கொடுத்துள்ளார் பாலா. அது மட்டுமல்ல அஜு அலெக்ஸ் என்கிற யூடியூபர் தொடர்ந்து தன்னைப் பற்றிய தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று அவர் மீதும் புகார் கொடுத்துள்ளார் நடிகர் பாலா.