ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தமிழில் 'அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழைவிட மலையாள திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஒரு வருடமாகவே இவரது திருமணங்கள் குறித்தும் திருமண முறிவுகள் குறித்தும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா.
இது இவரது நான்காவது திருமணம். இதற்கு முன்பு மூன்று திருமணங்கள் செய்து அவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் பாலா. இதில் இரண்டாவது மனைவியான பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் மற்றும் மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத் ஆகியோர் நடிகர் பாலா மீது அவ்வப்போது சோசியல் மீடியாவில் சில குற்றச்சாட்டுகளை வைத்து வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பாலாவும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இது இப்படியே தொடர்கதையாக இருப்பதால் கொச்சியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு தனது மனைவி கோகிலாவுடன் நேரில் சென்று அம்ருதா சுரேஷ் மற்றும் எலிசபெத் ஆகியோர் மீது தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக புகார் கொடுத்துள்ளார் பாலா. அது மட்டுமல்ல அஜு அலெக்ஸ் என்கிற யூடியூபர் தொடர்ந்து தன்னைப் பற்றிய தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று அவர் மீதும் புகார் கொடுத்துள்ளார் நடிகர் பாலா.