ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் 'புஷ்பா', 2024ல் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை புரிந்தது.
அப்படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 3' படம் 2028ம் ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், ''புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அட்லி,
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி
இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார்.
இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு 'புஷ்பா 3'
படத்திற்கான வேலைகளை துவங்குவார். 2028ல் 'புஷ்பா 3' திரையரங்கிற்கு
வரும்" எனக் கூறியுள்ளார்.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையிலும் மூன்று வருட இடைவெளி இருந்தது. ஆனால், மூன்றாம் பாகத்திற்கான இடைவெளிக்கு அல்லு அர்ஜுன் வேறு இரண்டு படங்களில் நடிக்க இருப்பதுதான் காரணம்.
மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட்டைத் தயாரிப்பாளர் தந்ததற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.