திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் 'புஷ்பா', 2024ல் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை புரிந்தது.
அப்படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 3' படம் 2028ம் ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், ''புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அட்லி,
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி
இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார்.
இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு 'புஷ்பா 3'
படத்திற்கான வேலைகளை துவங்குவார். 2028ல் 'புஷ்பா 3' திரையரங்கிற்கு
வரும்" எனக் கூறியுள்ளார்.
முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையிலும் மூன்று வருட இடைவெளி இருந்தது. ஆனால், மூன்றாம் பாகத்திற்கான இடைவெளிக்கு அல்லு அர்ஜுன் வேறு இரண்டு படங்களில் நடிக்க இருப்பதுதான் காரணம்.
மூன்றாம் பாகம் பற்றிய அப்டேட்டைத் தயாரிப்பாளர் தந்ததற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.




