ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா சில வருடங்கள் காதலித்து, பின்னர் கோவாவில் 'டெஸ்டினேஷன்' திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நான்கு வருடங்களுக்குள்ளேயே இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களது பிரிவுக்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை.
நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.
நேற்று தனது இன்ஸ்டா தளத்தில் 18 புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்கு சில வரிகளில் குறிப்பும் எழுதியிருந்தார் சமந்தா. ஆனால், அவர் பகிர்ந்த முதல் படமே ரசிகர்களின் கமெண்ட்டுகளில் சிக்கிக் கொண்டது.
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலர்களாக இருந்தபோது வலது முழங்கையில் ஒரே மாதிரியான டாட்டூவை போட்டுக் கொண்டனர். ஆனால், சமந்தா நேற்று பகிர்ந்த புகைப்படத்தில் அந்த 'டாட்டூ' அழிந்த நிலையில் இருந்தது. அதைத்தான் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதை போட்டோஷாப் மூலம் அழித்துள்ளாரா அல்லது நிரந்தரமாகவே அழித்துள்ளாரா என்பது தெரியவில்லை.
அதே சமயம், அந்த டாட்டூவை தனது கையில் இன்னமும் அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.