இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா சில வருடங்கள் காதலித்து, பின்னர் கோவாவில் 'டெஸ்டினேஷன்' திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நான்கு வருடங்களுக்குள்ளேயே இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களது பிரிவுக்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை.
நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.
நேற்று தனது இன்ஸ்டா தளத்தில் 18 புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்கு சில வரிகளில் குறிப்பும் எழுதியிருந்தார் சமந்தா. ஆனால், அவர் பகிர்ந்த முதல் படமே ரசிகர்களின் கமெண்ட்டுகளில் சிக்கிக் கொண்டது.
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலர்களாக இருந்தபோது வலது முழங்கையில் ஒரே மாதிரியான டாட்டூவை போட்டுக் கொண்டனர். ஆனால், சமந்தா நேற்று பகிர்ந்த புகைப்படத்தில் அந்த 'டாட்டூ' அழிந்த நிலையில் இருந்தது. அதைத்தான் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதை போட்டோஷாப் மூலம் அழித்துள்ளாரா அல்லது நிரந்தரமாகவே அழித்துள்ளாரா என்பது தெரியவில்லை.
அதே சமயம், அந்த டாட்டூவை தனது கையில் இன்னமும் அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.