ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி | ‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிகப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் சிறையில் இருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான். அது மட்டுமல்ல இவர் கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட.
இவர் இந்த தங்க கடலுக்கு தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் டிஜிபி ராமச்சந்திர ராவ் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைகள் அமலாக்க துறையில் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டு அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.