பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

அந்த காலத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் குகோர். பல அழியாத கிளாசிக் படங்களை உருவாக்கியவர், அவற்றில் ஒன்று 'கேஸ்லைட்'. இந்த படத்தின் கதையை தழுவி சி.என்.அண்ணாதுரை எழுதிய நாவல்தான் 'ரங்கோன் ராதா'.
இந்த நாவலை கருணாநிதி திரைக்கதை வடிவமாக எழுதி பின்னர் அது படமானது. சிவாஜி, ஹீரோ, வில்லன் என்று மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்த படம் இது.
கோட்டையூர் தர்மலிங்க முதலியார் (சிவாஜி), வெளியுலகிற்கு ஒரு உத்தமராகத் தோன்றும் ஒரு தந்திரமான மனிதர். அவரது மனைவி ரங்கம் (பானுமதி). பணக்கார வீட்டு பெண். ரங்கத்தின் தங்கை தங்கம் (ராஜசுலோச்சனா). மனைவியின் தங்கை தங்கத்தை திருமணம் செய்து கொண்டால் அவர்களது முழு சொத்தையும் அடையலாம் என்று திட்டமிடும் முதலியார். முதல் மனைவிக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி அதன் மூலம் தங்கத்தை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுவார். அந்த திட்டங்கள் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. சிவாஜி கொடுமைக்கார கணவனாகவும், காமுகனாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கி இருந்தார், டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.




