'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் |

ஆனந்த ராகம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரிஹானா பேகம். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்னி' சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்த இவர், பின்னர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில் ரிஹானா மீது ராஜ் கண்ணன் என்ற ஓட்டல் அதிபர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 20 லட்சம் பண மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
அவர் தனது புகார் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: 'பாண்டியன் ஸ்டோர்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை ரிகானா பேகம், நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். என்னுடன் நட்பாக பழகிய அவர், தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறினார். எனக்கும் திருமணம் ஆகாததால் ரிகானா பேகத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாய் கூறினார். அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனால் அவர் கேட்ட நகை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தேன். 20 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன்.
கடந்த ஆண்டு அவரது உறவினர்கள் முன்னிலையில் ரிகானா பேகத்தின் கழுத்தில் நான் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகுதான் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் தொடர்பில் இருப்பதும், திருமண ஆசை காட்டி என்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. ரிகானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார். மனுவை விசாரித்த காவல்துறை போலீசில் ஆஜராகுமாறு ரிஹானாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக ரிஹானா வெளியிட்டுள்ள வீடியோவில் "ராஜ்கண்ணன், தனது தொழிலை விரிவுபடுத்துவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி என்னிடம் இருந்து 18 லட்சம் வாங்கினார். ஆனால் அவர் அதன்பிறகு எந்த பணத்தையும் எனக்கு தரவில்லை. அடிக்கடி ரவுடிபோல் என்னை கத்தியை காட்டி மிரட்டி வந்தார். அவர் தங்க சங்கிலி என்று கூறி எனது கழுத்தில் அணிவித்தார். ஆனால் அது இந்துக்கள் அணியும் தாலி போல் இருந்ததால் கழற்றி வைத்துவிட்டேன். எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் ராஜ் கண்ணன் தான்" என்று பேசி உள்ளார்.