என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வருவாயை ஈட்டித் தரும் தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட ஊழியர்கள் ஸ்டிரைக் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி கடந்த வாரம் முதல் எந்த படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தெலுங்கு திரைப்பட ஊழியர் சம்மேளனம் அறிவித்து ஸ்டிரைக்கை ஆரம்பித்தது.
கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு கூட போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான திரைப்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர்கள் தரப்பில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது குறிப்பிட்ட சதவீத உயர்வு, அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு மீதி சதவீத உயர்வு என 30 சதவீத உயர்வை பிரித்துத் தருவதாகப் பேசியுள்ளார்கள். ஆனால், அதை ஊழியர்கள் தரப்பில் ஏற்கவில்லை என்கிறார்கள்.
நடிகர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் கொட்டித் தரும் தயாரிப்பாளர்கள் ஊழியர்களுக்கு சில நூறு ரூபாய் உயர்த்தித் தர மறுக்கிறார்கள் என ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஸ்டிரைக் இன்னும் நீடிக்கும் பட்சத்தில் அது அடுத்து வெளிவர உள்ள படங்களின் வெளியீட்டை பாதிக்கும் நிலை உருவாகும்.