சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதே ஆன நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்த அவரை கட்சியிலிருந்தும் உடனடியாக நீக்கினார்கள்.
இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் தற்போது ஜானி மீதான விசாரணையைத் துவக்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அதாவது 2019ம் ஆண்டிலிருந்தே அந்தப் பெண் நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். ஒரு மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் அந்த சங்கத்தினரை தெலுங்கு பிலிம் சேம்பர் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம். அதில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர் சார்பா அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.