ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛வேட்டையன்'. இதில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், பஹத் பாசில் ஆகியோருடன் ராணாவும் நடிக்கிறார். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தபட அனுபவம் பற்றி ராணா கூறுகையில், ‛‛ரஜினி உடன் நடிக்க விரும்பினேன். அது இவ்வளவு எளிதில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. வேட்டையன் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. போலீஸ், நீதித்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த விஷயங்களை இந்தப்படம் பேச இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான படம். இதுபோன்ற கதைகளில் ரஜினி நடிப்பது மகிழ்ச்சி'' என்றார்.