தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛வேட்டையன்'. இதில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், பஹத் பாசில் ஆகியோருடன் ராணாவும் நடிக்கிறார். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தபட அனுபவம் பற்றி ராணா கூறுகையில், ‛‛ரஜினி உடன் நடிக்க விரும்பினேன். அது இவ்வளவு எளிதில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. வேட்டையன் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. போலீஸ், நீதித்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த விஷயங்களை இந்தப்படம் பேச இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான படம். இதுபோன்ற கதைகளில் ரஜினி நடிப்பது மகிழ்ச்சி'' என்றார்.