ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛வேட்டையன்'. இதில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், பஹத் பாசில் ஆகியோருடன் ராணாவும் நடிக்கிறார். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தபட அனுபவம் பற்றி ராணா கூறுகையில், ‛‛ரஜினி உடன் நடிக்க விரும்பினேன். அது இவ்வளவு எளிதில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. வேட்டையன் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. போலீஸ், நீதித்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த விஷயங்களை இந்தப்படம் பேச இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான படம். இதுபோன்ற கதைகளில் ரஜினி நடிப்பது மகிழ்ச்சி'' என்றார்.




