Advertisement

சிறப்புச்செய்திகள்

காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகவேந்திரா மண்டபம் உருவாக காரணமானவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த் பேச்சு

04 ஜன, 2026 - 12:29 IST
எழுத்தின் அளவு:
AVM-Saravanan-was-responsible-for-the-creation-of-Raghavendra-Mandapam-Rajinikanths-speech
Advertisement


சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழா, சென்னை ஏ.வி.எம் பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல்ஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினி பேசியதாவது: சிந்தனையில், பேச்சில், செயலில் துாய்மையானவர் சரவணன்சார். நான் 1975ல் ஏவிஎம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு பெரியவர் சென்றதை பார்த்தேன். அவர் பின்னால் ஒருவர் வெள்ளை உடையில்
கை கட்டி சென்றார். அப்போது பெரியவர்தான் மெய்யப்ப செட்டியார். பின்னால் சென்றவர் அவர் மகன் சரவணன் என கமல்ஹாசன் சொன்னார்.

பின்னர், பலமுறை துாரத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். பின்னர், 1980களில் 'முரட்டுகாளை' படத்துக்காக மீண்டும் அவரை சந்தித்தேன். ஏவிஎம் செட்டியார் சொல்லி என்னை புக் பண்ணியதாக கேள்விப்பட்டேன். அந்த சமயத்தில் சரவணன் சாரை ஆபீசில் சந்தித்தேன். அவர் ஆபீஸ் மாதிரி அவ்வளவு சுத்தமாக வேறு எங்கும் பார்க்க முடியாது. நான் எத்தனையோ விஐபி ஆபீஸ் சென்று இருக்கிறேன். அவர் ஆபீஸ் மாதிரி பார்த்தது இல்லை. அவரிடம் 11 படம் பண்ணியிருக்கிறேன். அதுல 9 படம் எஸ்.பி.முத்துராமன் சார் படம். அந்த படங்களில் பக்கா கதை, ஜனங்கள் விரும்பும் விஷயங்கள் இருக்கும். அதை சரவணன் சார் ரெடி பண்ணுவார்.

திரைக்கதை, யார் நடிக்கணும், இசை, எடிட்டிங், ரசிகர்கள் விருப்பம் என அவர் பங்கு இருக்கும். மகாபாரதத்துல கண்ணன் உதவுற மாதிரி, எந்த ஆயுதமும் ஏந்தாமல் ஜெயிக்க வெச்ச மாதிரி, ஒரு படத்தின் வெற்றிக்குபின் சரவணன் சார் பங்கு இருக்கும். அவர் ஆபீசில் இருந்து பக்காவாக பிளான் பண்ணுவார். படத்தை ஜெயிக்க வைக்க உழைப்பார். 'எஜமான்' படம் பண்ணும்போது அந்த படத்தை அவரின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பண்ணலை. ஆர்.வி.உதயகுமார் இயக்கினாரு. ஆனாலும், அவருக்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் தனி ஆபீஸ் கொடுத்து தினமும் வரணும்னு சொன்னவர் சரவணன்சார், அது நட்புக்கு இலக்கணம்.

ராகவேந்திரா மண்டபம்

எனக்கு தனிப்பட்ட முறையில் பல நல்லது செய்தார். கோடம்பாக்கத்துல எனக்கு இடம் இருந்தது. அதை சும்மா விடக்கூடாது என சொல்லி, அவரே பிளான் பண்ணி கொடுத்து கட்ட வைத்ததுதான் ராகவேந்திரா திருமணம் மண்டபம். போயஸ் கார்டன்ல என் வீட்டுக்கு பக்கத்துல இடம் இருந்தது. நான் சினிமாகாரன் என்பதால் அதற்கு பத்து மடங்கு விலை சொன்னாங்க. அதனால் நான் சுவர் கட்டி வைத்து இருந்தேன்.

என் வீட்டுக்கு வந்த சரவணன் சார், அந்த இடத்தை அதிக விலை என்றால் கூட வாங்கிவிடுங்க. மற்றவர்கள் வந்தால் பிரச்னை, நீங்க வருத்தப்படுவீங்க என்றார். நான் அதை செய்தேன். சிவாஜிக்குபின் ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க, அது உடம்பு, மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைபிடிக்கிறேன். அவர் ரியல் ஜென்டில்மேன். அனைத்து அரசியல்வாதிகளிடமும் நட்பாக இருந்தார். எம்ஜிஆர் அவரை ஷெரீப் ஆக்கினார். ஜெயலலிதாவுக்கும் அவர் மீது மரியாதை.

சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிரான படம். ஆனாலும், கலைஞர் அந்த வெற்றி விழாவுக்கு வந்து விருது கொடுத்தார். அனைத்து அரசியல்வாதிகளிடம் அவர் அன்பாக இருந்தார். அதெல்லாம் சரவணன்சாருக்காக. இவ்வளவு வேலையை விட்டு முதல்வர் ஸ்டாலின் இங்கே வந்து இருக்கிறார். தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம். அந்த சமயத்துல சிஎம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார். அது அவர் அன்பை காட்டுகிறது. சரவணன்சார் எப்படி வாழ்ந்தார் என்பது தெரிகிறது.

அசையும் சொத்து, அசையா சொத்து என்பார்கள். அசையா சொத்துக்கு விலை ஜாஸ்தி. நம் மீது அக்கறை கொண்டவர்கள், நம்மை விரும்புகிறவர்கள் அசையா சொத்து. பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் கலைஞர், சரவணன் என பலர் அப்படி இருந்தார்கள். நம் மீது அன்பு கொண்டவர்களை காலம் சீக்கிரம் கொண்டு போய்விடுகிறது. பேர், புகழ், குழந்தைகள், சொத்து எல்லாம் இருந்தாலும், நல்ல மனிதர்கள் போகும்போது அனாதையான பீல் வருது. சரவணன் சார் கிரேட் மேன். இவ்வாறு ரஜினி பேசினார்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: நான் ஏ.வி.எம்.சரவணன்சாரிடம் முதலாளி என்பதை தாண்டி அன்பாக பேசுவேன். ஏ.வி.எம் குடும்பத்துடன் ஒட்டிக்கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அன்பு, மரியாதைக்காக இந்த விழாவுக்காக முதல்வர் உட்பட பலர் வந்தனர். ஏ.வி.எம் இன்ஸ்டியூட்டில் நான் படித்தது பெருமை. அந்த படிப்பு இன்றுவரை கை கொடுக்கிறது. அதில் எனக்கு மூத்தவர் இயக்குனர் எஸ்பி முத்துராமன். இந்த பள்ளியில் இருந்து வந்தவர்கள், கற்றுக்கொடுப்பவர்களாக மாறிவிட்டனர்.

நான் தவறு செய்யும்போது சத்தமாக சொல்லாமல், நல்லது செய்யும்போது தோளில் துாக்கி கொண்டாடிவர் சரவணன்சார். நான் 16 வயதில் உதவி இயக்குனராக சேர்ந்தபோது வாங்க போங்க என மரியாதையாக அழைத்தனர். நீங்களும் மற்றவர்களிடம் மரியாதையாக பேசுங்க என்றார். அதை நான் கடைபிடிக்கிறேன். ஏவிஎம் செட்டியார் இல்லாத குறையை சரவணன் சார் போக்கியவர். அவர் நல்ல முதலாளியும் கூட. பென்சன் திட்டத்தை சிறப்பாக கொண்டு வந்த முதல்வருக்கு இந்த அரங்கில் நன்றி சொல்கிறேன். காந்தியார் பார்த்த முதல் படத்தில் ஏவிஎம் பெயர் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உறுதியான 'பகவந்த் கேசரி' ரீமேக், மற்ற மொழிகளில் வரவேற்பு இருக்குமா?உறுதியான 'பகவந்த் கேசரி' ரீமேக், ... தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இயக்குனர் பாரதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

04 ஜன, 2026 - 01:01 Report Abuse
Edwin Jebaraj T,  Tenkasi இந்த மண்டபம் கட்டுமானத்தின் போது ஏழை எளிய மக்களுக்காக கட்டப்படும் மண்டபமாக விளம்பரப்படுத்தப் பட்டது ஏன் ரஜினிகாந்தே இதை பல பேட்டிகளில் அப்போது உறுதிப் படுத்தினார் ஆனால் நடந்ததோ நேர் எதிராக, மேல் தட்டு மக்கள் மட்டுமே நெருங்கக் கூடிய இடமாக மாறிவிட்டது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap