ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் பிரபாஸ். அதன்பின் அவர் நடிப்பில் உருவான படங்கள் பான் இந்தியாவாக வெளிவந்தன. இருப்பினும் பாகுபலி அளவுக்கு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. கடைசியாக வந்த சலார் ஓரளவுக்கு வசூலை தந்தன. தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரமாண்டமாய் உருவாகி வருகிறது.
இதையடுத்து அர்ஜூன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பிரபாஸை வைத்து நான் இயக்கவுள்ள படத்தின் பெயர் 'ஸ்பிரிட்'. இதில் பிரபாஸ் நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் பட்ஜெட் மட்டும் ரூ.300 கோடி செலவில் உருவாகிறது. இந்த பட்ஜெட்டை வெறும் சாட்லைட், டிஜிட்டல் உரிமத்தின் மூலமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். படத்தின் முதல்நாள் வசூலே ரூ.150 கோடி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.