ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இடையில் ஓய்வுக்காகவும் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் அவ்வப்போது லண்டன் சென்று வருகிறார் பிரபாஸ். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் வழக்கமாக வாடகைக்கு ஒரு மிகப்பெரிய பங்களா ஒன்றை தேர்வு செய்து தங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பங்களாவையே விலை கொடுத்து வாங்கி தனக்கு சொந்தமாக்கியுள்ளாராம் பிரபாஸ். இதை அடுத்து தனது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு அந்த பங்களாவில் சில புதிய வேலைப்பாடுகளையும் பிரபாஸ் செய்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.