‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி அவரது படங்களுக்கு என ரசிகர்களே அங்கே உருவாகி விட்டார்கள். பிரபாஸும் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து மூன்றே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக பாகுபலி தி எபிக் என்கிற பெயரில் புதிய இணைப்பு படம் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் ஜப்பானில் இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக நேரிலேயே ஜப்பான் சென்று அங்குள்ள ரசிகர்களுடன் இதன் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்துள்ளார் பிரபாஸ். அங்கு அவர் பேசும்போது, “ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே பலர் என்னிடம் சொன்னார்கள். அதை நேரில் பார்க்கும் கனவு இன்று எனக்கு நனவாகியுள்ளது. நானும் இனி வருடம் தோறும் ஜப்பானுக்கு வந்து உங்களை சந்திக்க இருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.