ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி அவரது படங்களுக்கு என ரசிகர்களே அங்கே உருவாகி விட்டார்கள். பிரபாஸும் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து மூன்றே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக பாகுபலி தி எபிக் என்கிற பெயரில் புதிய இணைப்பு படம் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் ஜப்பானில் இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக நேரிலேயே ஜப்பான் சென்று அங்குள்ள ரசிகர்களுடன் இதன் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்துள்ளார் பிரபாஸ். அங்கு அவர் பேசும்போது, “ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே பலர் என்னிடம் சொன்னார்கள். அதை நேரில் பார்க்கும் கனவு இன்று எனக்கு நனவாகியுள்ளது. நானும் இனி வருடம் தோறும் ஜப்பானுக்கு வந்து உங்களை சந்திக்க இருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.




