கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக லூசிபர் என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். மோகன்லாலை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அதற்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அப்போதே அறிவித்தார் பிரித்விராஜ். ஆனால் மோகன்லால், பிரித்விராஜ் இருவரும் தங்களது படங்களில் பிசியாக நடித்து வந்ததால் லூசிபர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக இதன் படப்பிடிப்பு குஜராத் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய மோகன்லால் இந்த வருடம் டிசம்பர் மாதம் அல்லது 2025 ஜனவரியில் நிச்சயமாக லூசிபர் 2 வெளியாகும் என்று கூறியுள்ளார்.