அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக லூசிபர் என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். மோகன்லாலை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அதற்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அப்போதே அறிவித்தார் பிரித்விராஜ். ஆனால் மோகன்லால், பிரித்விராஜ் இருவரும் தங்களது படங்களில் பிசியாக நடித்து வந்ததால் லூசிபர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக இதன் படப்பிடிப்பு குஜராத் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய மோகன்லால் இந்த வருடம் டிசம்பர் மாதம் அல்லது 2025 ஜனவரியில் நிச்சயமாக லூசிபர் 2 வெளியாகும் என்று கூறியுள்ளார்.