Advertisement

சிறப்புச்செய்திகள்

மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி”

13 ஜூலை, 2025 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Palooti-Valartha-Kili”-was-the-first-film-to-bring-together-Ilaiyaraaja,-Kannadasan,-and-S.P.B.
Advertisement


இந்திப் பாடல்களின் ஆதிக்கம் தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த 1970களில், வெள்ளித்திரைக்கு தமிழ் திரையிசையை மீண்டும் சொல்லித்தர வந்தவர்தான் 'இசைஞானி' இளையராஜா. 1976ம் ஆண்டு வெளிவந்த “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பாரம்பரிய மேற்கத்திய இசையை, தமிழர்களின் நாட்டுப்புற இசையோடு கலந்து, அதுவரை கேட்டறியாத ஒரு புதிய ஒலி வடிவத்தில் மெல்லிசையாக்கித் தந்து, முதல் படத்திலேயே திரையிசையின் உச்சம் தொட்டவர்தான் 'இசைஞானி' இளையராஜா.

படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. படத்தில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களையும் படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் எழுத, எஸ் ஜானகி, பி சுசீலா, டி எம் சவுந்தரராஜன் ஆகியோர் பாடியிருந்தனர். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் “அன்னக்கிளி உன்ன தேடுதே” என்ற பாடல் எஸ் ஜானகியின் குரலில் ஒரு முறையும், ஆண் குரலில் வரும் சோக பதிவான இதே பாடலை டி எம் சவுந்தரராஜன் ஒரு முறையும் பாடியிருப்பர். இந்த சோகப் பதிவிற்கான பாடலைப் பாட இளையராஜாவின் முதல் தேர்வாக இருந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். அந்த நேரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜனை பாட வைத்திருந்தனர்.

இளையராஜாவின் முதல் திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் தேவராஜ் மோகன்தான் அவரது இரண்டாவது திரைப்படமான “பாலூட்டி வளர்த்த கிளி” என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில்தான் 'கவியரசர்' கண்ணதாசனின் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிட்டியது இளையராஜாவிற்கு. படத்தில் இடம்பெற்ற “கொல கொலயா முந்திரிக்கா” என்று ஆரம்பமாகும் “கண்ணோடு கண்ணு” என்ற பாடலில் “கண்ணா ஓடோடி வா ராசா வா” என்று இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்ற பெயரைக் குறிப்பிட்டு, திரையிசையில் சாதிக்க வா என்ற பொருள்படும்படியாக வெகு யதார்த்தமாக 'கவியரசர்' கண்ணதாசன் எழுதியிருந்தது இந்தப் பாடலுக்குரிய ஒரு தனிச்சிறப்பு.

இதே திரைப்படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான “நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை” என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியதுதான் இளையராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய முதல் திரையிசைப் பாடலாக அமைந்திருந்தது. அந்த வகையில் இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பாலசுப்ரமணியம் என்ற இந்த மூன்று முத்துக்களையும் முதன் முதலாக இணைத்துப் பார்த்த பெருமை இந்த “பாலூட்டி வளர்த்த கிளி” திரைப்படத்திற்கு உண்டு என்பதே இந்தப் படத்திற்கான ஒரு தனி அங்கீகாரம் என்றால் அது மிகையல்ல.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர்20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் ... வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in