இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை |

கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் மூலம் தற்போது இந்திய அளவில் கிரஷ் ஆகிவிட்டார் ருக்மணி வசந்த்.
இதையடுத்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்த நான் இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் மூலம் இந்திய நடிகை ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' படம் மற்றும் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' போன்ற பான் இந்தியா படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது இன்னும் பெரிய அளவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவேன். இதன் காரணமாக அடுத்தடுத்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான பான் இந்தியா கதைகளை தேர்வு செய்யப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.