நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் மூலம் தற்போது இந்திய அளவில் கிரஷ் ஆகிவிட்டார் ருக்மணி வசந்த்.
இதையடுத்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்த நான் இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் மூலம் இந்திய நடிகை ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' படம் மற்றும் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' போன்ற பான் இந்தியா படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது இன்னும் பெரிய அளவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவேன். இதன் காரணமாக அடுத்தடுத்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான பான் இந்தியா கதைகளை தேர்வு செய்யப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.