சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

'ஏஸ், மதராஸி' போன்ற படங்களில் நாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தற்போது கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் 'காந்தாரா சாப்டர்-1' படத்தில் நடித்திருக்கிறார். காந்தாரா படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் தற்போது காந்தாரா சாப்டர்-1 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கர்நாடகாவில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய ருக்மணி வசந்த், ''இந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு நன்றி. இந்த காந்தாரா சாப்டர்-1 படம் என்னை செல்லுலார் அளவில் மாற்றி இருக்கிறது. மேலும் கன்னடத்தில் நான் நடித்த 'சப்த சாகர தாட்சே' படத்தின் பிரிமியர் காட்சியின் போது என்னுடைய நடிப்பை ரிஷப் ஷெட்டி பாராட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அது ஒரு எமோஷனலான தருணமாகும்'' என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மேடையிலேயே கண் கலங்கி இருக்கிறார் ருக்மணி வசந்த். இந்த காந்தாரா சாப்டர்-1 படம் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.