கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். தமிழில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'ஏஸ்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. பெரும் எதிர்பார்ப்பில் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது.
அவரது இரண்டாவது தமிழ்ப் படமான 'மதராஸி' இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம். டிரைலரைப் பார்த்த போது ருக்மிணிக்கும் படத்தில் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது தெரிகிறது.
முதல் படத் தோல்வியை மறக்கும் விதத்தில் 'மதராஸி' வெற்றி அவருக்கு அமைந்தால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் தேடிப் போகும். கன்னடத்தில் உருவாகி அக்டோபர் 2ல் வெளியாக உள்ள 'காந்தாரா சாப்டர் 1', தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'ட்ராகன்' படத்திலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும் ருக்மிணி வசந்த் தான் கதாநாயகி. அப்படங்களுக்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகையாக மாறிவிடுவார்.