பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்தவாரம் சித்தார்த் மல்கோத்ரா உடன் இவர் நடித்த ‛பரம் சுந்தரி' படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தொடர்பாக பல்வேறு புரொமோஷன்களை செய்தார் ஜான்வி. அப்படி அவர் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை இருப்பதாக கூறி அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‛திருமணத்திற்கு பின் எனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் 3 எனது அதிர்ஷ்ட எண். மேலும் மூன்று குழந்தைகளில் இருவர் சண்டை போட்டால் கூட மற்றொருவர் அவர்களை சமாதானப்படுத்துவார். ஒருவருக்கு மற்றொருவர் ஆதரவாகவும், துணையாகவும் இருப்பார்கள்'' என்றார்.