பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்தவாரம் சித்தார்த் மல்கோத்ரா உடன் இவர் நடித்த ‛பரம் சுந்தரி' படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தொடர்பாக பல்வேறு புரொமோஷன்களை செய்தார் ஜான்வி. அப்படி அவர் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை இருப்பதாக கூறி அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‛திருமணத்திற்கு பின் எனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் 3 எனது அதிர்ஷ்ட எண். மேலும் மூன்று குழந்தைகளில் இருவர் சண்டை போட்டால் கூட மற்றொருவர் அவர்களை சமாதானப்படுத்துவார். ஒருவருக்கு மற்றொருவர் ஆதரவாகவும், துணையாகவும் இருப்பார்கள்'' என்றார்.




