விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் அண்ணனை போல தானும் ஒரு நடிகராக மாறி சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுக்கும் அவரது தம்பிக்கும் கிட்டத்தட்ட குரல் ஒரே போல தான் இருக்கும். சமீபத்தில் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரிடமும் இந்த குரல் ஒற்றுமையால் என்ன சுவாரசியமான விஷயங்கள் நடந்தது என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, “சில நேரங்களில் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நாங்கள் இப்படி மாற்றி பேசி பிராங்க் செய்வது வழக்கம். பெரும்பாலான சமயங்களில் எங்கள் அம்மாவுக்கே யாருடைய குரல் இது என்று பிரித்துப் பார்க்க சிரமமாக இருக்கும். இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. என்னுடைய படம் ஒன்றில் எனக்காக ஆனந்த் தேவரகொண்டா சில காட்சிகளில் டப்பிங் பேசி இருக்கிறார். படத்தில் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் அது எந்த படம் என்று சொல்ல மாட்டேன். உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.