விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
கன்னட திரை உலகில் கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் இயக்குனர் ராஜ் பி.ஷெட்டி. பெரும்பாலும் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள டர்போ திரைப்படத்தில் மெயின் வில்லன் ஆக நடித்துள்ளார் ராஜ் பி.ஷெட்டி. புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதைப்படி ராஜ் பி.ஷெட்டி தமிழகத்தை சேர்ந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வசனம் பேச வேண்டிய சூழல் இருந்தது. தமிழில் பேசுவதற்கு ரொம்பவே தடுமாறி உள்ளார் ராஜ் பி.ஷெட்டி. அதே சமயம் மலையாளத்தில் அவர் சரளமாக பேசியதை பார்த்த இயக்குனர் வைசாக் உடனடியாக அவரது கதாபாத்திரத்தை மலையாளியாக மாற்றி மலையாளத்தில் வசனங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவற்றை ஒரே டேக்கில் பேசி ஆச்சரியப்படுத்தினாராம் ராஜ் பி.ஷெட்டி.