பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் மரேடுமல்லி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கனமழை காரணமாக காக்கிநாடா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
இதனை தொடர்ந்து புதிய லொக்கேசனுக்கு காரில் பயணித்த அல்லு அர்ஜுன், வழியில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த சாதாரண ஹோட்டல் ஒன்றை கண்டதும் காரை நிறுத்த சொல்லி, அங்கே உணவருந்தினார். அதன்பின் வெளியே வந்த அவர், கடைக்காரர் வேண்டாம் என்று மறுத்தும் அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சாலையோர கடையில் சாப்பிட்ட அல்லு அர்ஜுனின் எளிமையை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.