என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர்.. இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர்.. தற்போது அவர் நடித்துள்ள புஷ்பா படம் வரும் டிச-17ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அல்லு அர்ஜுன், தனது ரசிகர்களை தனியாக சந்திப்பதற்காக நேற்று ஹைதராபாத் நாகர்ஜுனா கன்வென்ஷன் ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன.
ஆனால் அளவுக்கு அதிகமானோர் அங்கு கூடியதால் நெரிசல் ஏற்பட்டு அதில் பத்துக்கும் அதிகமான ரசிகர்கள் காயமடைந்தனர். இந்த தகவல் இந்த நிகழ்விற்கு கிளம்பி வந்துகொண்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் டென்சன் ஆன அல்லு அர்ஜுன் நிகழ்ச்சியை ரத்து செய்து பாதிவழியிலேயே வீட்டிற்கு திரும்பினார்.
பின்னர் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று நிகழவிருந்த ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்திருந்த ரசிகர்கள் சிலர் காயமடைந்ததாக கேள்விப்பட்டேன்.. அவர்கள் பற்றிய விபரங்களை எனது குழுவினர் கவனித்து எனக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இனி இதுபோன்று ஒரு நிகழ்வு மறுபடியும் நிகழாதவாறு நான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்துக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.