பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் | இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை | பிரதமர் மோடிக்கு, ரஜினி, கமல், இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து | 'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த் | 'கூலி' பைனல் வசூல் அறிவிக்கப்படுமா ?, ரசிகர்கள் எதிர்பார்ப்பு | காதலுக்காக பாலினத்தை மாற்றும் ஜோடி: 'சரீரம்' படக்கதை இதுதான் | தமிழில் ரீமேக் ஆன ஸ்ரீலீலா படம்; செப்.,26ல் ரிலீஸ் |
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது கிரிஸ்டலா, 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அடுத்து ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல சமையல் கலைஞர் என்பதால் இவரது சமையல்கள் மிகவும் பிரபலம். குறிப்பாக திரைப்பிரபலங்கள் மற்றும் விஐபி வீட்டு விஷேங்களில் இவரது சமையல் தான் மணக்கிறது. இதுதவிர ‛குக் வித்' மோகாளி நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
ரங்கராஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர். சமீபகாலமாக ஸ்ருதியை ரங்கராஜ் பிரிந்து வாழ்வதாக செய்தி வந்தது. இதற்கிடையே காதலர் தினத்தன்று, ஜாய் கிரிஸ்டலா தனது வலைதளத்தில் 'மை மேன்' என்று குறிப்பிட்டு ரங்கராஜ் பெயரை தன் பெயருடன் சேர்த்து பதிவிட்டார். இதற்கு ஸ்ருதி, ‛நானே அவரது மனைவி' என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது சர்ச்சையானது.
இந்நிலையில் ஜாய் கிரிஸ்டலா, திடீரென அவரது இன்ஸ்டா பக்கத்தில் ரங்கராஜ் உடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு போட்டோவில் கிறிஸ்டலாவின் நெற்றியில் ரங்கராஜ் திலகமிடுவது போன்ற போட்டோவையும் வெளியிட்டுள்ளார். எனவே இவர்களுக்கு திருமணம் ஆகி உள்ளது உறுதியாகி உள்ளது.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலாவுக்கும் இது இரண்டாவது திருமணம். ‛பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை 2018ல் திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்துவிட்டார்.