இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் அவர் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து தைரியமாக வெளிவந்து கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் கமெண்டரி செய்யும் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்.சி கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கல்யாணி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தான் பயிற்சி பெற்றது, நடித்தது ஆகிய அனுபவங்களை கொண்டு கொஞ்ச நேரம் இந்த போட்டியின் போது தானே லைவ்வாக கமெண்ட்ரி செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்படியே அங்கே வருகை தந்திருந்த பார்வையாளர்களிடம் தங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் கல்யாணி பிரியதர்ஷன்.